Friday, 2024-03-29
Nidur Seasons
Site menu
Statistics

Total online: 1
Guests: 1
Users: 0
Login form
Main » 2013 » February » 1 » நினைவு இருப்பவர்களால்தான்- கவிதைகளோடு அன்புடன் புகாரி
8:19 AM
நினைவு இருப்பவர்களால்தான்- கவிதைகளோடு அன்புடன் புகாரி



நினைவு இருப்பவர்களால்தான்
தன்னை மறக்க முடியும்
நிம்மதி இருப்பவர்களால்தான்
தளர்ந்து உறங்க முடியும்

அன்பு இருப்பவர்களால்தான்
அள்ளி அணைக்க முடியும்
தெளிவு இருப்பவர்களால்தான்
புதியதைப் பொழிய முடியும்

கனவு இருப்பவர்களால்தான்
விரைந்து வெல்ல முடியும்
கற்பனை இருப்பவர்கலால்தான்
விரிந்து பறக்க முடியும்

கவிதை இருப்பவர்களால்தான்
ரசித்து வாழ முடியும்
இதயம் இருப்பவர்களால்தான்
உண்மையாய் வாழ்த்த முடியும்
                        -அன்புடன் புகாரி


கல்யாணமாம் கல்யாணம்


பாசத்துடன் புகாரி. பாசத்துடன் புகாரி. வாழ்த்துகள் கவிஞர் புகாரிக்கு


கவிஞர் புகாரி  பிறந்த ஊர் தஞ்சை அருகில் உள்ள ஒரத்தநாடு   தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.  இப்பொழுது கணினி பொறியாளராக கனடாவில் பணியாற்றி வருகிறார் .அவர் எழுதிய கவிதைகள் ஏராளம் . புகாரி அவர்கள் எழுதிய கல்யாணமாம் கல்யாணம் கவிதையை  அவரே சொல்வதை கேளுங்கள்

கணித்திரையில் கனவுகளைக் கவிதைகளாக்கிக் கொண்டும் விழித்திரையில் கவிதைகளைக் கனவுகளாக்கிக் கண்டும் கவிஞர் புகாரி தனக்கான சுவாச வெளியில் மிதந்தவராய்....தமிழனாய் வாழ்பவர்.......கவிஞர் புகாரி

கவிஞர் புகாரியின் கவிதைகள் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை. கருத்தழகு, சொல்லழகு, நடையழகு, அணியழகு ஆகிய நயங்கள் படைத்தவை.
அன்புடன்,
முகம்மது அலி ஜின்னா.
நீடூர்
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.

 JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎

http://nidurseasons.blogspot.in/

http://anbudanbuhari.blogspot.ca/2008/01/blog-post_2180.html
http://anbudanbuhari.blogspot.in/ http://nidurseasons.ucoz.com/
Views: 603 | Added by: nidurali | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *:
Search
Entries archive
Site friends
  • Create a free website
  • Calendar
    «  February 2013  »
    SuMoTuWeThFrSa
         12
    3456789
    10111213141516
    17181920212223
    2425262728
    Copyright MyCorp © 2024
    Free website builderuCoz